இன வன்முறையை நோக்கி நகரும் கிழக்கு மாகாணம்! வேடிக்கை பார்க்கும் TNA (காணொளிகளும் புகைப்படங்களும்)
அதிகாரமற்ற அரசியல் ஆழுமை அற்ற தலைமைகள் பாரபட்சமான அபிவிருத்தி வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு காணி அபகரிப்பு ஒரு இனத்திற்கு சார்பான அரச நிர்வாக கொள்கை தமிழ் மக்களின் அனைத்து நிர்வாகங்களின் மீதான ஆக்கிரமிப்பு என தமிழ் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் இன்று இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பீட்டளவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மிகவும் முஸ்லீம் சமூகத்தை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
அரசியல் அதிகாரங்கள் உட்பட அரச நிர்வாகம் வரை முஸ்லீம் தலைமைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லீம்களுக்கான முதலமைச்சராகவே செயல்பட்டுள்ளார்.
அதை தமிழ் அரசியல் தலைமைகள் தட்டி கேட்க முடியாத கையாளாக தலைவர்களாக உள்ளனர்.
முஸ்லீம் சமூகத்திற்கு உள்ள காணி பிரச்சினை மற்றும் முஸ்லீம்கள் தங்களது பிரதேசத்தை தனி இஸ்லாமிய பிரதேசமாக வைத்துக் கொண்டு தமிழர்களின் பிரதேசத்தில் காணிகளை கொள்வனவு செய்வது வியாபார நிலையங்களை கொள்வனவு செய்வது காணி அபகரிப்பில் ஈடுபடுவது போன்ற விடயங்கள் தமிழ் சமூகம் முஸ்லீம் சமூகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இல்லாது செய்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டிய தமிழ் அரசியல் வாதிகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பது இளைஞர் மத்தியில் ஒரு வித ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு கிழக்கில் அநீதி நடப்பதாக இளைஞர்கள் உணர்கிறார்கள்.
இதன் வெளிப்பாடுகள் இன்று சமூக வலைத்தளங்களில் பிரதிபலிப்பதுடன் யார் யாரையெல்லாம் இன வாதிகள் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்களோ அவர்களை தேடி சென்று அவர்களது இனவாதத்தை இன்று ஆயுதமாக பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக போய்விட்டது.
கிழக்கில் நடப்பது அதிகார மோதலோ அல்லது ஆட்சி அமைப்பதற்கான சன்டையோ அல்ல இது இரண்டு இனத்தின் இருப்புக்கான போராட்டம்.
இதில் கடந்த 60 ஆண்டுகாலமாக சிங்கள அரசுடன் போராடி இருப்பதை எல்லாம் இழந்த தமிழ் சமூகம் இன்று முஸ்லீம் சமூகத்திடம் போராடி மிஞ்சி இருப்பதையும் இழப்பதாக உணர்கின்றனர்.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இயலாமை தமிழ் இளைஞர்களையும் மாற்று சக்திகளையும் களத்தில் இறங்க தூண்டியுள்ளது.
இது ஒரு சாதாரண விடயமல்ல இலங்கையில் இரத்த ஆறு ஓடவேண்டும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெடிக்க வேண்டும் என்று செயற்படும் வெளி சக்திகள் கிழக்கில் உள்ள இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
இதுகுறித்து ஆளமா சிந்திக்க வேண்டியுள்ளது.
எனவே தமிழ் முஸ்லீம் தலைமைகள் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக தமிழ் சமூகத்தின் நியாயமான யதார்த்தமான எண்ணங்களுக்கும்
கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் இஸ்லாமிய வாத சிந்தனைகளை கைவிட்டு கிழக்கில் இரண்டு சமூகங்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
அதை விடுத்து தமிழ் சமூகம் எப்படி போனாலும் பரவாயில்லை இஸ்லாமிய சமூகம் வாழ்ந்தால் போதும் என்று முஸ்லீம்களோ
முஸ்லீம் சமூகம் எப்படி போனாலும் பரவாயில்லை தமிழ் சமூகம் வாழ்ந்தால் போதும் என்று தமிழர்களோ சிந்திப்பீர்களாக இருந்தால் அது அழிவிற்கே வழிவகுக்கும்.
குறிப்பாக கிழக்கில் நடக்கும் காணி அபகரிப்பு பாரபட்சமான அபிவிருத்தி குறித்து தமிழ் முஸ்லீம் தலைமைகள் கவனம் செலுத்தாது மக்களை மோதவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது வேடிக்கை பார்ப்பது தொடருமாக இருந்தால் கிழக்கில் குழு மோதல்கள் உருவாகி பின்னர் அது இனமோதலாக மாறக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.
அதிலும் இந்த விஷயத்தில் சிங்கள சக்திகளுடன் தமிழ் இளைஞர்கள் சேர்ந்து செயற்பட முயற்சிப்பது வன்முறை ஒன்று உருவாகுவதற்கான களநிலையை அதிகரித்துள்ளது.
No comments