Breaking News

கல்முனை மாவட்ட கோரிக்கையை தடுத்து சிங்களவருக்கு துணை போன முஸ்லிம் தலைமைகள்

#மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பாரை மாவட்டம் பிரிந்த போது கல்முனை மாவட்ட கோரிக்கையை தடுத்து சிங்களவருக்கு துணை போன முஸ்லிம் தலைமைகள்!

1950 களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்தபோது அது அம்பாறை மாவட்டமாக பிரிய இருக்கவில்லை;
மாறாக கல்முனை மாவட்டமாகத்தான் பிரிய இருந்தது. கல்முனைதான் அதன் தலைநகரமாக வர இருந்தது. ஆனால் அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னால் வணிகத்துறை அமைச்சரான மன்சூர் மாமானர் MS காரியப்பர்தான் அதனை அம்பாறைக்கு அனுப்பினார். ஏன் தெரியுமா? 
இரண்டு காரணங்கள்

ஒன்று: அன்று பெரிதாக முஸ்லிம்களுக்கு மத்தியில் கல்விகற்ற அரச உத்தியோகத்தர்கள் இருக்கவில்லை மாறாக தமிழரான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு சார்ந்தவர்களே இருந்தார்கள். எனவே கல்முனையில் கச்சேரி அமைந்தால் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களின் ஆளுகையின் கீழ் கல்முனை வந்துவிடும். அவ்வாறு வந்தால் காலப்போக்கில் கல்முனைக்குடி முஸ்லிம்கள் இழக்க வேண்டிவரலாம். அதை அனுமதிக்க முடியாது என்பதாகும்.ஆனால் இந்தயிடத்தில் பட்டிருப்பு தொகுதி தமிழ்அரசியல் வாதிகள் நீண்ட காலம் திட்டம் இல்லாததால் காரியப்பர் போன்றோரின் சூழ்ச்சியிற்கு கல்முனைத்தமிழரை பலியாக்கினார்கள்.

காரியப்பர் கல்முனைத்தொகுதி எல்லையை அன்று மாற்றுவதற்கு புதிய முஸ்லிம் குடியேற்றங்களான இஸ்லாமபாத்,மருதமுனை, நற்பட்டிமுனை, போன்ற கிராமங்களை உருவாக்கி இன்றைய கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை கூறுபடுத்திய போது பட்டிருப்பு தொகுதியில் அமைந்துள்ளதும் கல்முனை எல்லையான துறைநீலாவணை, பெரிய கல்லாறு போன்ற தமிழ் கிராமத்தை கல்முனைத்தொகுதியில் சேர்ப்பதற்கோ, புதிய தமிழர் குடியேற்றங்களை உருவாக்காமல் தமது வாக்கு வங்கிக்காக பட்டிருப்பு தொகுதி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செயற்பட்ட விளைவுதான் காரியப்பர் விதைத்த விதைகள் மருதமுனை முஸ்லிம் ஊர் கல்முனை பட்டிருப்பு இடையான தமிழ் ஊர் பகுதியை குறுக்காக்கி ஆலமரம் போல் வியாபித்து உள்ளது.
கல்முனையைப் தமிழரிடம் கொடுப்பதை தடுக்க அம்பாரை மாவட்டத்தையே இழந்தவர்கள் முஸ்லிம்கள். இன்று கரையோர மாவட்டம் கேட்டு கெஞ்சுகின்றார்கள்.
தற்போது பல அரச அலுவலகங்களையும் அம்பாரை சிங்கள நகரை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றது.தமிழருக்கு கொடுக்காவிடின் தானும் அனுபவிக்க கூடாது எனும் நிலையில் சிங்களவரிடம் இழந்துகொண்டிருக்கின்றார்கள். கல்முனை, இந்த மாவட்டத்தின் தலைநகராக இருந்திருந்தால் இந்த அரச அலுவலகங்களை இழந்திருப்பார்களா?


இரண்டாவது காரணம்: அம்பாறைப் பிரதேசத்தில் முஸ்லிம்களைக் குடியேற்றுவது. ஐம்பதுகளில் அம்பாறைத்தொகுதியில் சுமார் 2700 சிங்களக் குடும்பங்களே இருந்தன. அவர்களும் உகன போன்ற இடங்களை அண்மியதாகவே வாழ்ந்தார்கள். 1989 ம் ஆண்டு அம்பாறையில் ஐ தே கட்சியில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் – தயாரட்ன, கலப்பதி, பக்மீவெவ ஆகிய மூவருமே வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.  சு கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட காலம் சென்ற வீரசிங்க அவர்கள் மாத்திரமே அம்பாறையைச் சேர்ந்தவர் ( உகன).
அதுமட்டுமல்ல, அன்று அம்பாறைப் பிரதேசத்தில் காடு வெட்டி காணிகளை உருவாக்கி இருக்கின்றார்கள். எனவே அம்பாறையில் முஸ்லிம்களைக் குடியேற்றி முழு மாவட்டத்தையும் முஸ்லிம்களுக்குரிய மாவட்டமாக ஆக்கவேண்டும், என்று அவர் கனவு கண்டார். கல்முனைக்கு வந்த கச்சேரியை அம்பாறைக்கு அனுப்புவதற்கு அது இரண்டாவது காரணம்.

——————————–
சுதந்திர இலங்கையில் முதலாவது நிறைவேற்றப்பட்ட பாரிய நீர்த்தேக்கத் திட்டம் இங்கினியாகல நீர்த்தேக்கத் திட்டமாகும். அது அன்று ‘ கல்ஓய’ நீர்த்தேக்கத் திட்டம் எனத்தான் அழைக்கப்பட்டது. நீர்த்தேக்கத்திட்டம் நிறைவேறும் தறுவாயில் அன்றைய பிரதமர் D S சேனாநாயக்கா அவர்கள் அங்கு விஜயம் செய்தார். M S காரியப்பரும் உடன் இருந்தார். அவர், D S சேனாநாயக்காவின் பெயரை அந்நீர்த்தேக்கத்திற்கு சூட்டி அதை அந்த மலையில் செதுக்குகின்ற ஆலோசனையை முன்வைத்தார். இதனைக் கேட்டதும் பிரதமருக்கு பெருமகிழ்ச்சி, ஏனெனில் அவர்கூட இதனை யோசித்திருக்கவில்லை. எனவே அவ்வாறே செய்வோம் என்றார்.

இவ்வாறு பிரதமர் மகிழ்ச்சியாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமரிடம் M S காரியப்பர் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார், அதுதான் இந்தப் பிரதேசத்தில் ( இங்கினியாகலை வரை) தனது முஸ்லிம் மக்களைக் குடியேற்ற நீங்கள் அனுமதி தரவேண்டும்; என்பதாகும். மகிழ்ச்சியில் இருந்த பிரதமர் அதற்கு உடனடியாக சம்மதித்தார்.
தேர்தலும் வந்துவிட்டது, ‘ நான் சோற்றை ஆக்கிவைத்துவிட்டு வந்திருக்கின்றேன்; அகப்பையை என் கையில் தாருங்கள், உங்களுக்கு பங்கீடு செய்வதற்கு’ என்று M S காரியப்பர் மக்களிடம் கேட்டார். ஆனால் அத்தேர்தலில் அவரைத்தோற்கடித்தார்கள். அவர்களது வரலாறும் மாறியது. தென்பகுதியில் இருந்து பெரும்பான்மை சமூகத்தவர்கள் கொண்டுவரப்பட்டு வகை தொகையின்றி குடியேற்றப்பட்டார்கள். லஹுகல, தெஹியத்தக்கண்டிய போன்ற பல பிரதேசங்கள் இணைக்கப்பட்டன, என்பதெல்லாம் புதிய வரலாறு.
#காரியப்பர் அரசியல் ஞானம் ஏன் பட்டிருப்பு தொகுதி தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்திருந்தால் கல்முனைத் தேர்தல் தொகுதியில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் தெரிவாகும் சூழ்நிலை உருவாகியிருக்கும்.

காலம் காலமாக மட்டக்களப்பு தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்வமின்மை, நிபந்தனையற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளுடான இனநல்லிணக்கம் செயற்பாடு எந்தவிதத்திலும் அம்பாரை மாவட்ட தமிழருக்கு நன்மை பயக்கவில்லை.

மட்டக்களப்பு தமிழர் முஸ்லிம்களுக்கு கொடுத்த சலுகை பரந்த இனநல்லிணக்கம்.
1-ஏறாவூர் பற்று பரந்த தமிழ் பிரதேச செயலகத்தில் ஏறாவூர் தனி முஸ்லிம் ஊர் நகரசபை உருவாக்க உதவியது.
2-மட்டக்களப்பில் காத்தான்குடியிற்கு தனி மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் உருவாக்கியது.
3-கல்குடாவில் வாழைச்சேனையில் கோறளைப்பற்று மேற்கு தனி கல்வி வலயம் உருவாக்க உதவியது.

இந்த இனநல்லிணக்கம் விளைவாக அம்பாரை, திருகோணமலையில் #கல்முனை #மூதூர் தமிழர் எதுவிதத்திலும் சிறு நன்மை கூட பயக்கவில்லை.இதற்கு மேல் புதிய புதிய இன்னும் முஸ்லிம்களுக்கு தனியான கல்வி வலயம், தேர்தல் தொகுதி வழங்கி தமது பரந்த இனநல்லிணக்கம் காட்டுவார்கள்.

அருகிலுள்ள கல்முனை, மூதூர் தமிழர் யார் இவர்களுக்கு? ???




No comments