Breaking News

கேட்டான் கேட்டான் என்கிறீங்க! அப்படி என்னடா கேட்டான் சக்தி டிவி?


பசிலின் குற்றச்சாட்டுக்கு பதில் எங்கே..?
என்னை நீ காட்டி கொடுத்தால் உன்னை நான் காட்டி கொடுப்பேன் என்பது போல் உள்ளது.
உங்கள் பதில் ராஜபக்‌ஷ ஆட்சியிலும் நீங்கள் நடுநிலையாக இல்லை மைத்திரி ஆட்சியிலும் நீங்கள் நடுநிலையாக இல்லை. மொத்ததில் உங்கள் ஊடக தர்மத்தை காக்கவில்லை... 

கொழும்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் அலைவரிசைகளை மகாராஜாவுக்கு வழங்கப்பட்டதை பொதுக் கூட்டமொன்றில் பசில் ராஜபக்சே பேசியதே இவர்களின் கோபாத்திற்கு காரணம். ஆனால் நான் சக்தி நிறுவனத்திடம் கேட்பது என்னவென்றால் பசில் ராஜபக்சே பல மோசடிகளை செய்தது நேற்றுதான் உங்களுக்கு தெரிய வந்ததா? 
அண்மைக் காலங்களில் உங்களை விமர்சிப்பவர்களை மட்டுமே நீங்கள் மோசமானவர்களாக செய்திகளில் விமர்சிக்கும் நீங்கள் ஏன் அவர்கள் தவறு செய்யும் நேரத்தில் அதனை சுட்டிக்காட்ட மறந்து ஏன்? 
தவறுகளைச் சுட்டிக்காட்டும் கடமை ஊடக நிறுவனங்களுக்கு இருந்தும் அதனை உரிய நேரத்தில் செய்யாமல் தமது சுயநலத்துக்கு ஊடகங்கள் போரம் போவது சரியா மக்களே!

-மக்கள் 



No comments