கல்குடாவில் ஆட்டோவுக்கு தீ
கல்குடா
பட்டியடிச்சேனையில் முச்சக்கரவண்டி
ஒன்று கடந்த சனிக்கிழமை இரவு
தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக
கல்குடா பொலிஸ் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
கல்குடா
பட்டியடிச்சேனை புவுணு
வீட்டுத் திட்டத்தை சேர்ந்த
க.சந்திரமோகன்
என்பவரது வீட்டில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியே
இவ்வாறு தீயில் தேமடைந்துள்ளதுடன்,
அதனோடு
நிறுத்தி வைக்கப்பட்ட
துவிச்சக்கர வண்டியும்
எறிந்துள்ளது.
வீட்டில்
அனைவரும் நித்திரையில்
இருக்கும் போதே இச்சம்பவம்
நடந்துள்ளதாகவும்,
வித்தியாசமான
கருகிய மனம் வருவதை உணர்ந்த
வீட்டில் இருந்தவர்கள் உடனே
வெளியில் வந்து பார்க்கும்
போது முச்சக்கர வண்டி எரிவதை
அவதானித்துள்ளனர்.
உடனே
அயலவர்களின் உதவியுடன் தீயை
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்தும் முச்சக்கர வண்டி
எரிந்துள்ளதுடன்,
இத்தீயினால்
வீட்டின் சிறு பகுதியும்
எரிந்துள்ளதுடன்,
வீடு
முழுவதும் தீ பரவாது
தடுக்கப்பட்டுள்ளது.
No comments