Breaking News

பற்றிமா கல்லூரி ஆசிரியர்களின் கிரிக்கெட் போட்டி

நாளை வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி சர்வதேச ரீதியாக கொண்டாடப்படவுள்ள ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு நேற்று புதன்கிழமை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் மூன்று அணிகளாக பிரிந்து கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டியொன்றினை கல்லூரி மைதானத்தில் நடாத்தியிருந்தார்கள்.



இந்நிகழ்விற்கு கல்லாரியின் பிரதி முதல்வர் ஆர்.கருணாகரன் மாற்றும் சிரேஸ்ர ஆசிரியர்கள் தலைமைதாங்கி இவ்விளையாட்டுப்போட்டியினை ஆரம்பித்து வைத்தனர்.

பத்து ஓவர் கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் ஆசிரியர்கள் மூன்று அணிகளாக பிரிந்து இந்த கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டிருந்தனர் இங்கு கலந்து கொண்ட அணியில் சீ.எவ்.சீ கிங் அணியினர் வெற்றியீட்டி இவ்வாருடத்திற்கான வெற்றிக்கேடயத்தினை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும், கல்வி சாரா ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments