Breaking News

களுதாவளையில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் மர்மமான முறையில் குடும்ப பெண் ஒருவர் உயிரிந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய வீதியிலுள்ள வீடொன்றில் வசித்துவந்த இளம் குடும்ப பெண் ஒருவர் இன்று (7) சனிக்கிழமை காலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய  அகிலேஸ்வரன் புஸ்ப்பராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் 5 வயது பெண் குழந்தையின் பலத்த அழுகுரலை அவதானித்த வீதியில் சென்றவர்கள் உள்ளே சென்று பார்த்தவுடன் குறித்த குழந்தையின் தாய் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இவ்விடையம் குறித்து பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கி தகவலையடுத்து விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments