Breaking News

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயங்களில் ஒன்றான பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.



குறித்த ஆலயத்தின் உற்சவமானது மகாபாரதத்தை அடியொற்றியதாக இடம்பெறுகின்றது. இந்நிலையில், நேற்றைய தினம் தீ மதிப்பு திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

நேற்றைய தீ மிதிப்பு திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது பலரும் ஆக்ரோஷமாக தீயில் இறங்கி தெய்வம் ஆடிவந்தனர்.

இதேவேளை, பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லும் நிகழ்வு அண்மையில் வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments