Breaking News

இலங்கை நடிகையின் மோசமான செயற்பாடு! வைரலாகும் காணொளியால் சர்ச்சை


சாரதி சட்டத்தை மீறி பயணித்த நிலையில் தப்பிச் செல்ல முயற்சித்த நடிகை ஒருவர் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தனது கடமையை மேற்கொள்வதற்காக பொலிஸ் அதிகாரி வாகனத்திற்கு அருகில் சென்ற போது 500 ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்க நடிகை முயற்சித்துள்ளார்.
இதன் போது நடிகை பணம் வழங்க முயற்சிப்பதனை சாட்சிக்காக பொலிஸ் அதிகாரி காணொளியாக பதிவிட்டுள்ளார்.
“உங்களால் எப்படி எனக்கு பணம் வழங்க முடியும். இலஞ்சம் வழங்குவது குற்றமாகும். என்னால் உங்களை கைது செய்ய முடியும்” என பொலிஸ் அதிகாரி நடிகையிடம் குறிப்பிட்டுள்ளார்.
நான் Pre-shoot ஒன்றிற்கு செல்கின்றேன். பொலிஸார் பணம் பெற்று கொள்வதனாலேயே நான் வழங்க முயற்சித்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் குறித்த நடிகை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

No comments