Breaking News

திங்கள் முதல் 65 ரூபாவுக்கு தேங்காய்

வீணாக நுகர்வோரை பாதிப்புக்கு உள்ளாக்கும் அமைப்புக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக செயற்படுவதற்கு நுகர்வோர் அதிகாரசபையை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

சில அமைப்புக்கள் சில வகையான நுகர்வுப் பொருட்களின் விலைகளை நினைத்தவாறு அதிகரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு தேங்காயை 65 ரூபா படி 15 இலட்சம் தேங்காய்களை நகரப் பகுதிகளுக்கு வழங்க தேங்காய் விநியோக சபை மூலம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். 

No comments