மகிந்தவை தலைவராக நியமிக்க நீதிமன்று மறுப்பு
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்ககோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த மனுவை நிராகரித்துள்ளது.
அந்தக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு போட்டியிட்டவரே கட்சின் தலைவராக இருக்க முடியும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ நகரசபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட இருவர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
No comments