Breaking News

மைத்திரியின் மகள் மதுபான நிலைய லைசன்ஸ் பெற்றார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேனவின் பெயரில் பெயரில் மதுபான நிலைய அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன 2015டிஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் போதை ஒழிப்பை முன்னிலைப்படுத்தியிருந்தார். அத்துடன் பெண்கள் மதுபானம் விற்பனை செய்வதற்கும் கொள்வனவு செய்வதற்கும் சட்டரீதியாக விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த நிதியமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் முயற்சித்தபோது ஜனாதிபதி கடுமையான எதிர்ப்பை வௌியிட்டிருந்தார்.

எனினும் ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தனது பெயரில் சொந்தமாக மதுபான விற்பனை அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக் கொண்டுள்ளார்.


இந்த அனுமதிப்பத்திரம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments