Breaking News

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு சந்திப்பும் பத்திரிகையாளர் மாநாடும்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட மட்ட சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர் மாநாடு கல்லடியில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்தில் அக்கட்சியின் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தலைமையில் இன்று 07 நடைபெற்றது.

இதன் போது கட்சியின் தலைவரும் முன்னால் மீள்குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் உபதலைவர் சோமசுந்தரம் சிறீகரன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான எஸ்.வசந்தன் வவுனியா மற்றும் வடமாகாணத்திற்கு பொறுப்பான இணைப்பாளர் பொன்னுத்துரை அரவிந்தன் மற்றும் திருமலை மாவட்ட இணைப்பாளர் எஸ். கிரு உட்பட யாழ், வன்னி அம்பாறை மாவட்ட இணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இச்சந்திப்பின் போது கட்சியின் புதிய உறுப்பினர்கள் இணைப்பது,  நிதியுதவிகள் சேகரிப்பது தொடர்பாகவும் எதிர்கால தேர்தலின் தயார் நிலைகள் மற்றும் அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 திருத்தம் மக்கள் மத்தியில் சாத்தியமற்றது போன்ற விடயங்கள் சம்மந்தமாக கலந்தாலோசித்ததுடன் மாவட்ட மட்டத்தில் உள்ள பொது பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

அத்துடன் திருமலை மாவட்டத்தின் சம்பூர்  கட்டைப்பறிச்சான் பிரதேசங்களுக்கு என்.இராசநாதன். மூதூர் கிளிவெட்டி பகுதிகளுக்கு         என். தவராஜா , ஈச்சிலம்பற்று தொகுதிக்கு ஏ.மோகன்ராஜ் மற்றும் தம்பலகாமம் பிரதேசத்திற்கு பி.விஜயநாதன் ஆகியோர் எதிர்காலத்தின் கட்சியின் செயற்பாடுகளுக்காக இன்றிலிருந்து உத்தியோகபூர்வமாக செயற்படவுள்ளதாக  கட்சித் தலைவர் வி.முரளிதரன் ஊடக பரிந்துரைக்கப்பட்டதுடன் மத்திய குழு சந்திப்பின் பின்னர் பத்திரிகையாளர் மாநாடும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments