Breaking News

பெண்ணின் உடலில் காயங்களை ஏற்படுத்தியவருக்கு சிறை

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்து, அப்பெண்ணின் உடலில் காயங்களை ஏற்படுத்திய நபரொருவருக்கு, ஒரு வருட கட்டாயச் சிறைதண்டனை விதித்து, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடும் அத்தொகையைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் 6 மாதங்கள் சிறைதண்டனையும், 1,000 ரூபாய் தண்டப்பணமும் அதனைச் செலுத்தத் தவறின் மேலும் ஆறு மாதங்கள் சிறைதண்டனையும் விதித்து, நீதவான் உத்தரவிட்டார்.



சம்பூர் கிழக்கு, மூதூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவருக்கே, இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், கடந்த 4 வருடங்களுக்கு முன்னர், கிளிவெட்டி பகுதியில் குறித்த பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்து, உடலில் காயங்களை ஏற்படுத்தியதாக, அப்பெண்ணால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, மூதூர் பொலிஸார், குறித்த நபருக்கெதிராகத் தாக்கல் செய்த வழக்கு, மூதூர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.


இந்நிலையிலே, சந்தேகநபரைக் குற்றவாளியாக இனங்கண்ட நீதவான், மேற்கண்ட தீர்ப்பை வழங்கிங்கினார்.

No comments