Breaking News

கிழக்கு மாகாண உறுப்பினர்கள் மூவர் கட்சி மாற முடிவு

கிழக்கு மாகாண சபையின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவர் இலங்கை பொதுஜன முன்னணியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.

டப்ளியூ.டி.வீரசிங்க, டி.எம்.ஜெயரத்ன மற்றும் சந்திரா தேவரப்பெரும ஆகிய உறுப்பினர்களே இவ்வாறு கட்சி மாற முடிவு செய்துள்ளதாக, தெரியவந்துள்ளது.



இன்று அம்பாறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, டப்ளியூ.டி.வீரசிங்க இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வழங்கும் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பு இதுவெனவும், மிகுந்த கவலையுடன் அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வருங்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப அனைவரும் இணையுமாறும் வீரசிங்க, மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments