Breaking News

மனைவி காசு கொடுக்காததிற்கு கணவர் தூக்கிட்டு தற்கொலை -ஏறாவூர் தளவாய் கிராமத்தில்

#மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமபுரங்களில் மனைவிமாரை வெளிநாடு அனுப்புவது அல்லது மனைவி பெயரில் நிறுவனங்களில் எத்தனை வீத வட்டியென்றாலும் கடனுக்கு பணத்தை பெற்று அதை கொண்டு சுயதொழில் செய்து முன்னேற்ற சிந்தனை குறைவு. 

இதனால் இவர்களது இளம் பெண் பிள்ளைகள் பாடசாலை கல்விகளை இடைநிறுத்தி கடனை அடைக்க ஏறாவூர் கடைகளில் வேலைக்கு போவது அதிகரித்துள்ள நிலையில் குடும்பத் தலைவர் ஆண்கள் விடும் பிழை ஒரு இனத்தின் அழிப்பிற்கே துணை போகுன்றது.

நேற்று கடனாக கொடுக்கும் சமூர்த்தி பணத்தில் தமக்கு பங்கு கிடைக்கவில்லை என்பதற்காக தளவாய் கிராமத்தில் தற்கொலை நடைபெற்றுள்ளது.
ஏறாவூர் #பொலிஸ் #பிரிவுக்குட்பட்ட #தளவாயில் #வயோதிபர் #தூக்கிட்டு #தற்கொலை.

சின்னத்தம்பி வீதி, தளவாய் பிரதேசத்தை சேர்ந்தவரே  இன்று மதியம் தனது வீட்டு முற்றத்திலுள்ள வேப்பமரக் கிளையில் நைலொன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 
இவரது மனைவி நேற்று காலை சமூர்த்தி வங்கியில் கடன் பெறுவதற்காக சென்று, பெறமுடியாமல் திரும்பி வந்த போது "எடுத்து வந்த பணத்தில் 5000/= ரூபாவை தனக்கு தரவேண்டுமென்று முறன்பட்டு அதிகரித்த போதையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

நுன் கடன் ஆபத்தான ஒன்று அதை எவரும் கவனத்தில் கொள்வதில்லை இதே போன்று பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்




No comments