Breaking News

2017 வாக்காளர் இடாப்பு நிறைவு; இணையத்தில் பார்வையிட

2017 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த இடாப்பில் தங்களது பெயர்கள் உரிய முறையில் பதிவு செய்யப்படாத வாக்காளர்களுக்கு, எதிர்வரும் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் இடாப்பு பட்டியலின் பிரதிகள், கிராம சேவையாளர் பிரிவுகள், பிரதேச செயலகங்கள், மாகாண சபைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான திருத்தங்கள் காணப்படும் நிலையில் அவற்றை கிராம சேவையாளருக்கு அல்லது தேர்தல்கள் ஆணையகத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
இந்த வரைபு நகலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். 
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பான வாக்காளர் பட்டியல் இவ்வாண்டுக்கான (2017) திருத்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments