Breaking News

முஸ்லிம்களின் புகைத்தல் பாவனையையும் தடை செய்த வீர தமிழ் இளைஞர்கள்! விழித்தது மட்டக்களப்பு.


நன்றி Retnathurai Haran

வாழைச்சேனை முறாவோடையில் ஆக்கிரமிப்பை தடுத்ததோடு புகைத்தல் பாவனையையும் தடை செய்த வீர தமிழ் இளைஞர்கள்!
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள முறாவோடை தமிழ் கிராமம் முஸ்லீம் மக்களால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு அக்கிராமம் முற்றாக பறிபோகும் நிலையை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள முறாவோடை சக்தி வித்தயாலயத்திற்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தை ஒரு முஸ்லீம் நபர் அபகரித்து வேலி அமைத்துள்ளமையை எதிர்த்து நீதி மன்றில் பாடசாலை நிர்வாகத்தினால் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணை முடிவில் அந்த நிலம் பாடசாலைக்குச் சொந்தமானது என நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் குறித்த முஸ்லீம் நபர் பலவந்தமாக வேலி அமைத்துள்ள மைதான காணியை மீளவும் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்க மறுத்து வரும் நிலையில் பாடசாலை நிருவாகம் கிண்ணையடி கிராமத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர்களுடன் உதவியுடன் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை நேற்று நடாத்தியுள்ளது.

போராட்ட முடிவில் முறாவோடை கிராமத்து இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இளைஞர்களது தலைமையில் இளைஞர் குழு ஒன்று முறாவோடை தமிழ் பிரிவில் உள்ள கடைகளுக்குச் சென்று அக்கடைகளில் கிகரட் வாங்குவதற்காக என்னும் சாட்டுடன் தமிழ் கிராத்தினுள் நுழையும் முஸ்லீம் இளைஞர்கள் கிராமத்திலுள்ள தமிழ் பெண்களுடன் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதுடன்இச் சமூகவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதனை சுட்டிக்காட்டி கடைகளில் சிகரட் விற்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இளைஞர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கடை உரிமையாளர்கள் தாம் சிகரட் விற்பனையை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
நன்றி-தர்மலிங்கம் சுரேஸ்.
#இதுவல்லவோ_வீரம் 
#வாழ்த்துக்களை_அள்ளி_தெளிக்கிறோம்





No comments