Breaking News

தேர்தல் வன்முறை :32 அபேட்சகர்களுடன் 483 பேர் கைது.!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், 32 அபேட்சகர்களுடன் 483 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 32 அபேட்சகர்களுடன்  483 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 
இதன்படி 116 தேர்தல் வன்முறை பதிவாகிய வேளையில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த களத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் 222 பேர் அதில் 20 பேர் தேர்தல் அபேட்சகர்களாவர். 
அதனுடன் தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் 260 பதவாகியுள்ள நிலையில் 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 12 அபேட்சகர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த தேர்தல்கால வன்முறைகளில் பாரியளவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இக்காலத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பேரணிகள், போராட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி பயன்பாடு என்பவை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 
நாடளாவிய ரீதியில் தேர்தல் குறித்து அனைத்து தரப்பினருக்கும் பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

1 comment:

  1. How to get to Situs Judi Slot Online - Goyang FC
    Situs Judi Slot 안전 사설 토토 사이트 Online Indonesia 2021-10-13. Situs Judi Slot Online Deposit 검증 사이트 먹튀 랭크 Pulsa Terpercaya 마추 자 먹튀 2021/10/22. 토토 먹튀 사례 Situs Judi Online Deposit Pulsa Terbesar · Game Judi Slot Online mgm공식사이트 Resmi

    ReplyDelete