Breaking News

முந்தல் கோர விபத்தில் சிக்கிய பஸ்

முந்தலம் நகரத்தில் இடம்பெற்ற விபத்தில், குழந்தைகள் எழுவர் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பஸ்ஸொன்றும் லொறியொன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.



கொழும்பிலிருந்து நொச்சியாகம வரையிலும் பயணம் செய்துகொண்டிருந்த, சுற்றுலாவுக்கு வந்திருந்த ஆரம்ப பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் இராஜாங்கனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments